Thursday 19 January 2017

அலங்கநல்லூர்  பாலமேடு   ஜல்லிக்கட்டு  அமைப்பினர்  விடுக்கும் ஓர் அறிவிப்பு

 ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பொங்கி எழுந்துள்ள  அரசியல் கட்சியினர் , மற்ற பிரபல அமைப்பினார் , பேட்டி கொடுக்கும் பேச்சாளர்கள்  கல்லூரி  மாணவர்கள் ஆகியோருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்

 நீங்கள் அனைவரும் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்திற்கு உடனே  புறப்பட்டு வந்து எங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தால் நாங்கள் ஜல்லிக்கட்டு எற்பாடுகளை உடனடியாக செய்து ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்கிறோம்  ஓர் லட்சம் பேர் ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பு அரணாக இருந்தால்  நீங்களும் நாங்களும் தமிழ் காலச்சாரத்தை காக்க எதையும் தியாகம் செய்ய தயார் என்பதை இந்த நீதிமன்றத்திற்கும் உணர்வுற்ற அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த முடியும்
 ஆதலால் உண்மையில்  தமிழ் காலச்சாரத்தை காக்க நினைக்கும்  அரசியல்வாதியாக நீங்கள் இருந்தால் உங்கள் தொண்டர் படையை இங்கு அனுப்புங்கள் மாணவ செல்வங்களே நீங்கள் அனைவரும் இங்கு வாருங்கள் காலச்சரத்தை  காக்க புறப்பட்டுருக்கும்   படையே இங்கு வாருங்கள் நீங்கள் இங்கு வந்தால்  உணர்வின் வெளிப்பாடு வெளியில் தெரியும் இல்லையென்றால் தமிழனின் வீரம் டெல்லிக்கு தெரியாது புறப்பட்டு வாருங்கள் பாலமேட்டை நோக்கியும் அலங் நல்லூரை நோக்கியும்  என்று இரு கரம் கூப்பி அழைக்கிறோம்
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இச்செய்தியை அனைத்து குரூப்புகளுக்கும் கொண்டு சேர்க்கவும் அத்துடன் இல்லாமல் வீரனாக புறப்பட்டு வாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை கரம் கூப்பி வேண்டுகிறோம்
இப்படிக்கு
ஜல்லிகட்டு அமைப்பினர்
அலங்கநல்லூர்
பாலமேடு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.