Saturday 21 January 2017

நாளை மதியம் ஒரு மணி அளவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்க போகின்றது

*சற்று* *முன்* *கிடைத்த* *தகவல்*.



என் இனிய தமிழக இளைஞர்களே..நாளை மதியம் ஒரு மணி அளவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்க போகின்றது.இதை அறிவித்த பின்னர் யாரும்  உற்சாகத்தில் போராட்டத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தை களைக்க வேண்டாம்.அப்படி நாம் இந்த கூட்டத்தை களைத்தால் நாம் நிணைத்தால் கூட மீண்டும் இந்த மாபெரும் கூட்டத்தை சேர்க்க இயலாது.இந்த அறிவிப்பில் ஒரு மாபெரும் சதி அடங்கியுள்ளன.பீட்டா இயக்கத்தை காப்பாற்ற மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பாகும்.மேலும் இந்த அறிவிப்பு நிறந்திரமானவை அல்ல.நம்மை ஏமாற்றுவதற்காக செய்யும் செயலாகும்.நாம் நடத்தும் போராட்டம் உண்மையானால்,நாம் தமிழன் என்பது உண்மையானால்,மாடுகளை  நாம் தெய்வமாக கருதுவது உண்மையானால் பீட்டா இயக்கத்தை நம் நாட்டிலிருந்து தடை செய்து,ஜல்லிக்கட்டு நடத்த நிறந்திர சட்டத்தை கொண்டு வரும்வரை மேலும் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு கைவிடாமல் போராடுவோம்.....


முடிந்தவரை அறிவிப்பிற்கு முன்பு போராடும் அனைத்து தமிழக இளைஞர்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்..... இல்லையென்றால் நாம் போராடிய போராட்டத்திற்கு பயனில்லை....



- தமிழன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.